testing KhambaRamayan

சூரியன் உதித்தல்

975. மீன் உடை எயிற்றுக் கங்குல்
கனகனை வெகுண்டு, வெய்ய
கான் உடைக் கதிர்கள் என்னும்
ஆயிரம் கரங்கள் ஓச்சித்,
தான் உடை உதயம் என்னும்
தமனியத் தறியில் நின்று,
மானுட மடங்கல் என்னத்
தோன்றினன் வயங்கு வெய்யோன்.
1

தசரத மன்னன் சேனையோடு
சோணையாற்றை யடைதல்

976. முறை எலாம் முடித்த பின்னர்,
மன்னனும் முரித் தேர்மேல்
இறை எலாம் வணங்கப் போனான்;
எழுந்து உடன் சேனை வெள்ளம்
குறை எலாம் சோலை ஆகி,
குழி எலாம் கழுநீர் ஆகி,
துறை எலாம் கமலம் ஆன,
சோணையாறு அடைந்தது அன்றே.
2

அனைவரும் சோலை சேர்தல்

977. அடைந்து அவண் இறுத்த பின்னர்,
அருக்கனும் உம்பர்ச் சார,
மடந்தையர் குழாங்கேளாடு,
மன்னரும், மைந்தர் தாமும்,
குடைந்து வண்டு உறையும் மென்பூக்
கொய்து இனிது ஆட, மைதீர்
தடங்களும் மடுவும் சூழ்ந்த
தண் நறும் சோலை சார்ந்தார்.
3

மாதர் சோலை சார்தல்

978. திண் சிலை புருவம் ஆகச்,
சேய் அரிக் கருங்கண் அம்பால்
புண் சில செய்வர் என்று
போவன போன்ற மஞ்ஞை;
பண் சிலம்பு அளிகள் ஆர்ப்ப,
நாணினால் பறந்த போன்ற,
ஒண் சிலம்பு ஆர்ப்ப மாதர்
ஒதுங்குதோறு ஒதுங்கும் அன்னம்.
4

தோழியருடன் மகளிர் ஆடல்

979. செம்பொன் செய் சுருளும் தயெ்வக்
குழைகளும் சேர்ந்து மின்னப்,
பம்பு தேன் அலம்ப ஒல்கிப்,
பண்ணையின் ஆடல் நோக்கிக்,
கொம்பொடும் கொடி அனாரைக்
குறித்து அறிந்து உணர்தல் தேற்றார்;
வம்பு அவிழ் அலங்கல் மார்பின்
மைந்தரும் மயங்கி நின்றார்.
5

குயில்களின் நாணம்

980. பாசு இழைப் பரவை அல்குல்
பண் தரு கிளவி தண் தேன்
மூசிய கூந்தல் மாதர்
மொய்த்த பேர் அமலை கேட்டுக்,
கூசின அல்ல, பேச
நாணின குயில்கள் எல்லாம்,
வாசகம் வல்லார் முன் நின்று
யாவர் வாய் திறக்க வல்லார்?
6

மகளிர் கொம்புகளை வளைத்துப் பூக்கொய்தல்

981. நஞ்சினும் கொடிய நாட்டம்
அமுது என நயந்து நோக்கிச்,
செஞ்செவே கமலக் கையால்
தீண்டலும், நீண்ட கொம்பர்
தம் சிலம்பு அடியில் மென்பூச்
சொரிந்து உடன் தாழ்ந்த என்றால்,
வஞ்சிபோல் மருங்குலார் மாட்டு
யாவரே வணங்கலாதார்?
7

ஆடவர்தோள் ஏறி மகளிர் பூக்கொய்தல்

982. அம்புயத்து அணங்கின் அன்னார்
அம் மலர்க் கைகள் தீண்ட,
வம்பு இயல் அலங்கல் பங்கி
வாள் அரி மருளும் கோளார்,
தம் புய வரைகள் வந்து
தாழ்வன; தளிர்த்த மென்பூங்
கொம்புகள் தாழும் என்றல்
கூறல் ஆம் தகைமைத்து ஒன்றா?
8

மகளிர் முகங்களை வண்டுகள் சூழ்தல்

983. நதியினும் குளத்தும் பூவா
நளினங்கள், குவளையோடு,
மதி நுதல் வல்லி பூப்ப
நோக்கிய மழலைத் தும்பி,
அதிசயம் எய்திப் புக்கு
வீழ்ந்தன, அலைக்கப் போகா;
புதியன கண்ட போழ்து
விடுவரோ புதுமை பார்ப்பார்?
9

பூங்கொம்புகள்

984. உலம் தரு வயிரத் திண் தோள்,
ஒழுகி வாள் ஒளி கொள் மேனி,
மலர்ந்த பூந் தொடையல் மாலை,
மைந்தர்பால், மயிலின் அன்னார்
கலந்தவர் போல ஒல்கி
ஒசிந்தன, சில கை வாராப்,
புலந்தவர் போல நின்று,
வளைகில பூத்த கொம்பர்.
10

மகளிர் பூங்கொடிகளை அலங்கரித்தல்

985. பூ எலாம் கொய்து கொள்ளப்
பொலிவு இல துவள நோக்கி,
‘யாவையாம் கணவர் கண்ணுக்கு?
அழகு இல இவை என்று எண்ணிக்,
கோவையும், வடமும், நாணும்,
குழைகளும், குழையப் பூட்டிப்,
பாவையர் பணிமென் கொம்பை
நோக்கினர் பரிந்து நிற்பார்.
11

மகளிர் கூந்தலில் வண்டு மொய்த்தல்

986. துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல்
தும்பி ஈட்டம்,
நறும் கோதையோடு நனை சின்னமும்
நீத்த நல்லார்
வெறும் கூந்தல் மொய்க்கின்றன; வேண்டல
வேண்டு போதும்;
உறும் போகம் எல்லாம் நலன் உள்வழி
உண்பர் அன்றே?
12

ஒரு நங்கையின் புலவி

987. மெய்ப் போதின் நங்கைக்கு இணை ஒப்பவள்,
வெண் பளிங்கில்
பொய்ப் போது தாங்கிப் பொலிகின்றதன்
மேனி நோக்கி,
‘இப் பாவை எம்கோற்கு உயிர் அன்னவள் ‘
என்ன உன்னிக்
கைப் போதினோடு நெடுங்கண் பனி
சோர நின்றாள்.
13

ஒரு பெண் அழுத காரணம்

988. கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு
கொம்பு, ஒர் மன்னன்
தோள் உண்ட மாலை ஒரு தோகையைச்
சூட்ட நோக்கித்,
தாள் உண்ட கச்சில் தகையுண்ட
முலைக் கண் மீது
வாள் உண்ட கண் நீர் மழை உண்டென
வார நின்றாள்.
14

மனைவி காணாவாறு ஒரு மன்னன் மறைதல்

989. மயில் போல் வருவாள் மனம் காணிய,
காதல் மன்னன்
செயிர் தீர் மலர்க் காவின் ஒர் மாதவிச்
சூழல் சேரப்,
பயில்வாள் இறை பண்டு பிரிந்து
அறியாள் பதைத்தாள்,
உயிர் நாடி ஒல்கும் உடல் போல்
அலமந்து உழன்றாள்.
15

ஒரு பெண் குயிலிடம் மலர் வேண்டுதல்

990. மை தாழ் கருங் கண்கள் சிவப்பு உற
வந்து தோன்றா,
நெய் தாவும் வேலானொடு நெஞ்சு
புலந்து நின்றாள்,
எய்தாது நின்ற மலர் நோக்கி, ‘
எனக்கு இது ஈண்டக்
கொய்து ஈதி! ‘என்று ஓர் குயிலைக் கரம்
கூப்பி நின்றாள்.
16

புலவி நுணுக்கம்

991. செம்மாந்த தஙெ்கின் இளநீரை ஓர்
செம்மல் நோக்கி
‘அம்மா! இவை மங்கையர் கொங்கைகள்
ஆகும் ‘என்ன,
‘எம்மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன? ‘
என்று, ஒர் ஏழை
விம்மா, வெதும்பா, வெயரா முகம்,
வெய்து உயிர்த்தாள்.
17

கண் புதைத்தல்

992. போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன
பொலம் கொள் திண் தோள்
மாரன் அனையான், மலர் கொய்து
இருந்தானை, வந்து ஓர்
கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள்
கண் புதைப்ப,
‘ஆர்? ‘என்னலோடும், அனல் என்ன
அயிர்த்து உயிர்த்தாள்.
18

மனைவியர்க்கு மலரைக் கொடாது ஒரு
மன்னன் நிற்றல்

993. ஊற்று ஆர் நறை நாள் மலர், மாதர்
ஒருங்கு வாசச்
சேற்றால் விளையாத செந்தாமரைக்
கைகள் நீட்டி,
ஏற்றார்க்கு உதவான் இடை ஏந்தினன்
நின்று ஒழிந்தான்,
மாற்றான், உதவான், கடுவச்சையன்
போல், ஒர் மன்னன்.
19

மாற்றவள் பெயர் கூறக் கேட்டு வருந்துதல்

994. தைக்கின்ற வேல் நோக்கினள், தன்
உயிர் அன்ன மன்னன்,
மைக்கொண்ட கண்ணாள் எதிர்,
மாற்றவள் பேர் விளம்ப,
மெய் கொண்ட நாணம் தலைக்கொண்டு,
வெதும்பி, மென்பூக்
கைக் கொண்டு மோந்தாள், உயிர்ப்பு உண்டு
கரிந்தது அன்றே.
20

ஓர் அரசன் மதயானைபோல் திரிதல்

995. திண் தோள் அரசன் ஒருவன், குலத்
தேவிமார்தம்
ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர்
உண்கண் எல்லாம்
கண்டு ஆதரிப்பத் திரிவான், மதம்
கவ்வி உண்ண
வண்டு ஆதரிக்கத் திரி மா மத
யானை ஒத்தான்.
21

ஒத்த பங்கு பெற்ற மனைவியர் ஊடல்

996. சந்திக் கலா வெண் மதி வாள்
நுதலாள் தனக்கும்,
வந்திக்கல் ஆகும் மடவாட்கும்,
வகுத்து நல்கி,
நிந்திக்கல் ஆகா உருவத்தினன்
நிற்ப, மென் பூச்
சிந்திக், கலாப மயிலின், கண்
சிவந்து போனார்.
22

ஒருத்தி மலர் தேடுவதுபோல் கணவனைத்
தேடித் திரிதல்

997. வந்து எங்கும், தன் மன்
உயிரேயோ? பிறிது ஒன்றோ?
கந்தம் துன்றும் சோர் குழல்
காணாள், கலை பேணாள்,
அந்தம் தோறும் அற்று உகும்
முத்தம் அவை பாராள்,
சிந்தும் சந்தத் தேம் மலர்
நாடித் திரிவாளும்.
23

ஒரு பெண் கிள்ளையை அனுப்பித் தொடர்தல்

998. யாழ் ஒக்கும் சொல் பொன்
அனையாள், ஓர் இகல் மன்னன்
தாழத் தாழாள், தாழ்ந்த
மனத்தாள், தளர்கின்றாள்,
ஆழத்து உள்ளும் கள்ளம்
நினைப்பாள், அவன் நின்ற
சூழற்கே தன் கிள்ளையை
ஏவித் தொடர்வாள் உம்.
24

ஒரு தலைவன் மாதவிப் பந்தரை இரத்தல்

999. அம் தார் ஆகம் அத்து, ஐங்கணை
நூறு ஆயிரம் ஆகச்
சிந்தா நின்ற சிந்தையினான்,
செய்குவது ஓரான்,
‘மந்தாரம் கொண்டு ஈகுதியோ?
மாதவி! ‘என்று, ஓர்
சந்து ஆர் கொங்கைத் தாழ் குழலாள்பால்
தளர்வான் உம்.
25

ஊடினாள் ஒருத்தி கண்ணடி பார்த்து வருந்தல்

1000. நாடிக் கொண்டாள், குற்றம்
நயந்தாள், முனிவு ஆறாள்,
ஊடிக் காணக் காட்டும்
நலத்தாள், உடன் நில்லாள்,
தேடிச் தேடிச் சேர்த்த
செழும்பூ நறுமாலை
சூடிச் சூடிக், கண்ணடி
நோக்கித், துவள்வாளும்.
26

ஒரு பெண் விறலியிடம் அணிகளைக்
கழற்றிக் கொடுத்தல்

1001. ‘மறலிக்கு ஊண் ஆம் வன் கதிர்
வேலான் இடையே வந்து
உற இக் கோலம் பெற்றிலது
என்றால், உடன் வாழ்வு இப்
பிறவிக்கு ஏலாது; என் செய்வது
இப்பேர் அணி? ‘என்னா,
விறலிக்கு ஈவாள் ஒத்து, இழை
எல்லாம் விடுவாளும்.
27

ஒரு பெண் ஒளிந்த கிளிக்காக ஒசிந்து வருந்தல்

1002. வம்பில் பொங்கும் கொங்கை
சுமக்கும் வலி இன்றிக்
கம்பிக் கின்ற நுண் இடை
நோவக் கசிவாளும்,
பைம்பொன் கிண்ணம் மெல் விரல்
தாங்கிப், பயில்கின்ற
கொம்பில் கிள்ளைப் பிள்ளை
ஒளிப்பக், குழைவாளும்.
28

அன்னத்திற்கு ஆடை அளித்தல்

1003. தன்னைக் கண்டாள் மெல் நடை
கண்டாள், தமரேபோல்
துன்னக் கண்டாள், ‘தோழமை ‘
என்றாள், ‘துணை ‘என்றாள்,
‘உன்னைக் கண்டார் எள்ளுவர்;
பொல்லாது; உடு நீ! ‘என்று,
அன்னக் கன்னிக்கு ஆடை
அளிப்பான் அமைவாளும்.
29

ஒரு பெண், மயிலுக்கு அஞ்சியும் நாணியும் மறைதல்

1004. பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள்,
தன் படர் அல்குல்
ஆகக் கண்டு, ஓர் ஆடு அரவு
ஆம் என்று, அயல் நண்ணும்
தோகைக்கு அஞ்சிக், கொம்பின்
ஒதுங்கித், துணர் ஈன்ற
சாகைத் தன்கைக் கண்கள்
புதைத்துத், தளர்வாளும்.
30

மறைந்து தேடி விளையாடுதல்

1005. ‘பொன்னே! தேனே! பூமகளே!
காண் எனை! ‘என்னாத்,
தன் நேர் இல்லாள், அங்கு ஒரு
கொய்பூந் தழை மூழ்கி,
‘இன்னே என்னைக் காணுதி
நீ! ‘என்று, இகலித், தன்
நல் நீலக் கண் கையின்
மறைத்து, நகுவாளும்.
31

ஒருவன் வில்லும் தாமரையும் கை கொண்டு திரிதல்

1006. வில்லில் கோதை நாண் உற,
மிக்கோன், இகல் அங்கம்
புல்லிக் கொண்ட தாமரை
மென்பூ மலர் தாங்கி,
அல்லில் கோதை மாதர்
முகப் பேர் அரவிந்தச்
செல்வக் கானில் செங்கதிர்
என்னத் திரிவானும்.
32

மனைவியர் பாடலை ஆடவர் கூர்ந்து கேட்டல்

1007. செய்யில் கொள்ளும் தெள் அமுதச்
செஞ்சிலை ஒன்று
கையில் பெய்யில் காமனும்
நாணும் கவினார், தம்
மையல் பேதை மாதர்
மிழற்றும் மழலைச் சொல்
தயெ்வப் பாடல், சொல் கலை
என்னத், தரெிவாரும்.
33

காமன் ஆயனைப் போலுதல்

1008. சோலைத் தும்பி மென் குழல்
ஆகத், தொடை மேவும்
கோலைக் கொண்ட மன்மத
ஆயன் குறி உய்ப்ப,
நீலத்து உண்கண் மங்கையர்
சூழல் நிரை ஆவின்,
மாலைப் போதின், மால் விடை
என்ன வருவாரும்.
34

ஒரு பெண்ணின் புருவக்கடை முனிவரையும்
வெல்லும்

1009. ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால்
காக்கல் ஆவது காமன் கை வில் எனும்
வாக்கு மாத்திரம் அல்லது வல்லியில்
பூக் கொய்வாள் புருவக் கடை போதுமே.
35

ஞானிகளும் காமத்தை வெல்வார் அல்லர்

1010. நாறு பூங்குழல் நல் நுதல் புன்னைமேல்
ஏறினான் மனத்து உம்பர் சென்று ஏறினாள்;
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்
வீறு சேர் முலை மாதரை வெல்வரோ?
36

ஒருவன் அரும்புகளையும் புதிய தளிர்களையும்
கொய்தல்

1011. சினையின் மேல் இருந்தான் உருத் தேவரால்
வனையவும் அரியாள் வனப்பின் தலை
நினைவும் நோக்கமும் நீக்கலான் கைகளால்
நனையும் நாள் முறியும் கொய்து நல்கினான்.
37

மனைவியின் கோபம் கண்டு ஒருவன் தடுமாறுதல்

1012. வண்டு வாழ் குழலாள்
முகம் வாடிடத்,
தண்டு போல் புயத்தான்
தடுமாறினான்,
உண்டு கோபம் என்று
உள்ளத்து உணர்ந்து, அவள்
தொண்டை வாயில்
துடிப்பு ஒன்று சொல்லவே.
38

அனைவரும் புனலாட்டுக்குச் செல்லுதல்

1013. ஏயும் தன்மையர் இவ் வகையார் எலாம்
தூய தண் நிழல் சோலைத் துறு மலர்
வேயும் செய்கை வெறுத்தனர் வெண் திரை
பாயும் தீம் புனல் பண்ணை சென்று எய்தினார்.
39

Previous          Next

Latest Govt Job & Exam Updates:

View Full List ...

© Copyright Entrance India - Engineering and Medical Entrance Exams in India | Website Maintained by Firewall Firm - IT Monteur